சிக்கி.....
உன் ஓரவிழிப் பிரதேச வெளிச் சத்தினால்
எனக்குள் ஏற்பட்ட சிலிர்ப்பு தான்
மத்தாப்பின் பூக்களாய் சிரிக்கின்றன!!
உன் பார்வை என் மேல்
என்னுள் ஆயிரம் ஆயிரம் மின்சார
கற்களின் பதிப்புகள்!!
சிலநேர உன் சலனமில்லாத பாராமுகம்
என் இதயத்தை அனுகுண்டுகளாய்த்தான் பிள்க்கின்றன!!
உன் அடுக்கடுக்கான அலட்சிய பேச்சுகளின்
பிரளயங்கள் அனைத்தும்
என்னை சரவெடியாய் தகர்க்கின்றன!
உன் ஒற்றை சிரிப்பு என் மனதை
சங்கு சக்கரமாய் சுழ்ற்றி வைக்கிறது
எனினும் உனக்குள்ளும் எனக்குள்ளும்
ஏற்படும் விருப்பங்கள் எல்லம்
பட்டாசுகளின் புகைத்திரைபோல்
மௌனத்த்ரையில் சிக்கி தவிக்கிறது!!
No comments:
Post a Comment